Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தயாராக இல்லாத ஊடக நிறுவனங்கள் தோல்வியடையும்:Jameel Altheyabi.

மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தயாராக இல்லாத ஊடக நிறுவனங்கள் தோல்வியடையும்:Jameel Altheyabi.

185
0

மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை வளர்த்துக் கொள்ளத் தயாராக இல்லாத ஊடக நிறுவனங்கள் பலவற்றை இழந்து தோல்வியடையும் என்றும், டிஜிட்டல் சகாப்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவால் கொண்டுவரப்பட்ட மாற்றங்களுடன் வேகத்தை வைத்திருப்பது ஊடக நிறுவனங்களுக்கான கடுமையான போட்டியைத் தக்கவைக்க மிகவும் அவசியம் என்றும் Okazன் தலைமை ஆசிரியரும் சவுதி கெசட்டின் பொது மேற்பார்வையாளருமான ஜமீல் அல்தேயாபி கூறினார்.

ரியாத்தில் உள்ள சவூதி ஊடக மன்றத்தில் “அச்சு ஊடகத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பிலான அமர்வில் பங்கேற்ற அல்தேயாபி அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்து, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஊடக நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளையும் அவர் முன்மொழிந்தார்.

ஊடகச் சந்தையில் அதிக சுறுசுறுப்பு இருப்பதாகவும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஊடகங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், தொழில் மீதான ஆர்வம் ஒரு பத்திரிகையாளரைச் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்பத் தயார்படுத்தும் என்று அல்தேயாபி வலியுறுத்தினார்.

தற்போது அச்சு ஊடகத்தால் ஆயிரக்கணக்கான பிரதிகள் மட்டுமே விநியோகிக்க முடியும் என்றாலும், உள்ளூர் மற்றும் சர்வதேச டிஜிட்டல் புள்ளிவிவரங்களின்படி, அவற்றின் பல்வேறு டிஜிட்டல் தளங்கள் மூலம் பரவலானது மில்லியன் கணக்கானவர்களை எட்டியுள்ளது என்று அல்தேயாபி தனது உரையில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!