ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah, ஹஜ் பயணிகளுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் தொழில்முறை நிர்வாக அமைப்புகளை ஆதரிப்பதில் தனது அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2023 ஆம் ஆண்டில், வரலாற்றில் முதல் முறையாகச் சவூதிக்கு வெளியில் இருந்து வந்த 13,550,000 உம்ரா பயணிகளுக்குச் சவூதி சேவை வழங்கியது, இது ஐந்து மில்லியன் அதிகரிப்பு மற்றும் 2019 ஆம் ஆண்டில் 58 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோர் எப்போதும் படைப்பாற்றல் மிக்கவர்கள் என்றும், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் நுசுக் அப்ளிகேஷன் மூலம் சேவைகளை வழங்க முயல்வதாகவும், யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சகம் நுசுக் பிசினஸ் தளத்தை அறிமுகப்படுத்திப் புதுமையாளர்கள், தொடக்க நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பயன்பாட்டு சேவை வழங்குநர்கள் (ATPs), டெவலப்பர்கள் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு அதன் ஆலோசனை சேவைகள் மற்றும் ஆதரவு திட்டங்களை வழங்குகிறது.
அமர்வில் பங்கேற்று, ஹஜ் அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான உதவி துணைச் செயலாளர் இன்ஜி.அப்துல் அசிஸ் அல்-முத்தாமி மாற்றங்களுக்கு ஏற்பச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் சிறந்த அனுபவத்தைச் சவூதி கொண்டுள்ளது மற்றும் கொரோனா வைரஸ் காலத்தில் அவற்றின் மதிப்பை நிரூபித்துள்ளது என்றும் கூறினார்.
ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளுக்கு உதவுவதற்காகச் சேவைகளை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சவாலான பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற முக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன் “மான்ஷாத்” தொடங்கியுள்ள சர்வதேச சவாலையும் அவர் குறிப்பிட்டார்.





