Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் தேசிய காவலர் பிரிவுகளின் இராணுவ தயார்நிலைக்கு அமைச்சர் அழைப்பு.

தேசிய காவலர் பிரிவுகளின் இராணுவ தயார்நிலைக்கு அமைச்சர் அழைப்பு.

250
0

சவூதி அரேபிய தேசியக் காவல்படையின் அமைச்சர் இளவரசர் அப்துல்லா பின் பந்தர், இராணுவப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது அல்-கஹ்தானி மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் மூத்த இராணுவ அதிகாரிகளைப் புதன்கிழமை ரியாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தாகச் சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளவரசர் அப்துல்லா, ராணுவத் தயார்நிலையை பராமரிக்க அனைத்து முயற்சிகளையும் அணிதிரட்டுமாறு தேசிய காவலர் இராணுவ அதிகாரிகளை வலியுறுத்தியதோடு, இராணுவப் பிரிவில் பணிகளின் முன்னேற்றம் குறித்த காலாண்டு அறிக்கைகளை ஆய்வு செய்தார்.

இந்தக் கலந்தாய்வில் தேசிய பாதுகாப்புப் படையின் துணை அமைச்சர் அப்துல் மொஹ்சென் அல்-துவைஜ்ரி, தேசிய காவலர் மேம்பாட்டு திட்ட அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் ஜெனரல் டாக்டர் மிஷால் அல்-முசாத் மற்றும்தேசிய காவல்படை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நாசர் அல்-முஹன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!