செங்கடல் மற்றும் அமலா இடங்களுக்குப் பொறுப்பான செங்கடல் குளோபல், கடற்கரைகளின் மாசற்ற நிலையைப் பராமரிக்க அதிநவீன மின்சாரத்தில் இயங்கும் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மணலின் அழகியலை மேம்படுத்திப் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ குறிப்பிடத் தக்க வகையில் ஒரு கன சென்டிமீட்டர் அளவுக்குச் சிறிய பொருட்களை அடையாளம் காண்பதோடு ஒரு மணி நேரத்தில் 3,000 சதுர மீட்டர் வரை சுத்தம் செய்யும் திறன் கொண்டது.
ரிமோட் ஆபரேஷனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து முழுமையான துப்புரவு முடிவுகளை அடைவதற்காகக் கவனத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில், செங்கடல் மெகா திட்டம் 22 தீவுகள் மற்றும் ஆறு பிரதான இடங்களில் 8,000 ஹோட்டல் அறைகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு அலகுகள் கொண்ட 50 ஓய்வு விடுதிகளுடன் ஆடம்பர மரினாக்கள், உயரடுக்கு கோல்ஃப் மைதானங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும் இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





