உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம், சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் நகராட்சி அமைச்சகம், ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி உட்பட பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த மொத்தம் 126 ஊழியர்களை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாகச் சவுதி மேற்பார்வை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (நசாஹா)அறிவித்தது.
பிப்ரவரி 2024 இல் 288 நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான 3,209 ஆய்வுகள் மற்றும் விசாரணைகளைத் தொடர்ந்து இந்தக் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், நசாஹாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர்கள்மீது ஏராளமான குற்றவியல் மற்றும் நிர்வாக வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.