Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் அரசியலுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தீர்க்கும் முயற்சிகளுக்கு அமைச்சர் அல்-ஷேக் அழைப்பு.

அரசியலுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தீர்க்கும் முயற்சிகளுக்கு அமைச்சர் அல்-ஷேக் அழைப்பு.

164
0

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீஃப் அல்-ஷேக், அரசியல் வடிவமைப்புகளுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தீர்க்கத் தீவிர முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்து வெறுப்புப் பேச்சுகள் மற்றும் இஸ்லாத்தை சிதைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருவதால் சில இஸ்லாமிய குழுக்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை அடைய அரசியலை பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மானின் ஆதரவின் கீழ் ஆரம்பமான “உலகில் உள்ள மத விவகாரங்கள், இஃப்தா மற்றும் பல துறைகளுடன் தொடர்பு”என்ற சர்வதேச இரண்டு நாள் இஸ்லாமிய மாநாட்டின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உலக மக்களிடையே வன்முறை மற்றும் வெறுப்பு உணர்வுகளைக் குறைப்பதற்காக, சர்வதேச மதத் தலைவர்கள் ஒத்துழைப்புடன் சிறந்த அணுகுமுறையை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தும் மாநாட்டின் முக்கியத்துவத்தை அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்வி, கலாச்சாரம், சிந்தனை மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு, ஒற்றுமை, தொடர்பு மற்றும் மனித நாகரிகத்தைச் செழுமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாகரீக, கலாச்சார மற்றும் மனித ஒற்றுமையை ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய ஒற்றுமையின் கருத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச் செயலாளர் ஹுஸைன் தாஹா வலியுறுத்தினார்.

பல ஐரோப்பிய நாடுகளில் புனித குர்ஆனை எரித்து அவமதிக்கும் சம்பவங்களின் இழிவான நிகழ்வுகளைக் கண்டிக்கும் வகையில், முஸ்லிம் நாடுகள் கூட்டறிக்கையை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தொடக்க அமர்வுக்குப் பிறகு, இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ஆசிரிய உறுப்பினர் டாக்டர் சலேஹ் பின் சாத் அல்-சுஹைமி தலைமையில் நடைபெற்ற முதல் பணி அமர்வில் அமைச்சர் அல்-ஷேக் கலந்து கொண்டு, மாநாட்டில் எட்டு அமர்வுகளும், அதில் மிதவாதம், தீவிரவாதம், சீரழிவு, பயங்கரவாதம், சகிப்புத்தன்மை மற்றும் மக்களிடையே சகவாழ்வு போன்ற தலைப்புகள்குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டார்.

இஸ்லாமியர்களிடையே இஸ்லாமிய ஒற்றுமையை ஊக்குவித்தல், தீவிரவாதக் கருத்துகளை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் புனித குர்ஆன் மற்றும் நபியின் சுன்னாவைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் மாநாட்டில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!