Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் GCC அமைச்சர்களின் ஆயத்த கூட்டத்தில் கலந்து கொண்ட சவூதி வெளியுறவு அமைச்சர்.

GCC அமைச்சர்களின் ஆயத்த கூட்டத்தில் கலந்து கொண்ட சவூதி வெளியுறவு அமைச்சர்.

263
0

கடந்த டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு ஜிசிசி உச்ச கவுன்சிலின் 44வது அமர்வின் ஆயத்த அமைச்சர் குழுவின் 158வது கூட்டத்தில் சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் கலந்து கொண்டார்.

கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டத்தில், ஜி.சி.சி மாநிலங்களின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஜசெம் அல்புதைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரியாத்தில் நடைபெற்ற ஜி.சி.சி கவுன்சிலின் 43வது உச்சி மாநாட்டின் முடிவுகளைச் செயல்படுத்துவது தொடர்பான பல அறிக்கைகள் மற்றும் அமைச்சர்கள், தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் செயலகம் சமர்ப்பித்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். GCC-க்கு இடையேயான உரையாடல்கள், பிற நாடுகள் மற்றும் உலகளாவிய குழுக்கள் தொடர்பான தலைப்புகளும் விவாதிக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பில் கத்தாருக்கான சவூதி தூதர் இளவரசர் மன்சூர் பின் காலித் பின் ஃபர்ஹான் அவர்கள் பலதரப்பு சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல்-ராஷி மற்றும் சவூதி அரேபிய அமைச்சக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் அல்-தாவுத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!