155 அரசு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர், சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக மேற்பார்வை மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையம் (Nazaha) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் அதிகாரிகள் மொத்தம் 924 ஆய்வுச் சோதனைகளை மேற்கொண்டதாக நசாஹா தனது, X கணக்கில் தெரிவித்துள்ளது.இதன் விளைவாகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 382 அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. விசாரணையின் போது 155 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2021 மற்றும் 2023 க்கு இடையில், கண்காணிப்பு அமைப்பு 5,235 நபர்களை ஊழல் வழக்குகளில் கைது செய்தது. வேலை நிறுத்தப்பட்ட பிறகும், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் அல்லது தனிப்பட்ட லாபத்திற்காக வேலைகளைச் சுரண்டும் நபர்களைப் பிடிக்க, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களைத் தொடர்ந்து மேற்பார்வையிட ஆணையம் திட்டமிட்டுள்ளது.