Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஹஜ் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள மன்னர் சல்மான்.

ஹஜ் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள மன்னர் சல்மான்.

127
0

ஜித்தாவில் நடைபெற்ற மந்திரி சபையின் வாராந்திர அமர்வுக்குத் தலைமை தாங்கிய புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், ஹஜ் பயணிகள் தங்கள் சடங்குகளை எளிதாகவும் வசதியாகவும் செய்யச் சிறந்த வசதிகளையும் சேவைகளையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

கிராண்ட் மசூதி மற்றும் நபிகள் நாயகம் மசூதிக்குச் சேவை செய்வது, பார்வையாளர்களைக் கவனித்துக்கொள்வது மற்றும் அவர்களின் வசதியை உறுதி செய்வது ஆகியவை சவூதிகளின் முதன்மையான முன்னுரிமைகள் என்று அவர் வலியுறுத்தினார்.

சவூதி ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-தோசாரி, சவுதி அரேபியாவின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமருக்கு இடையேயான தொலைபேசி அழைப்பு உட்பட, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் சவுதி அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குற்றப் பதிவுகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக அமெரிக்க நீதித்துறையுடன் விவாதித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு (MoU) கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வியட்நாமின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மேலும் பல முக்கிய ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!