Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஒரு வாரத்தில் 20,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோதிகள் கைது.

ஒரு வாரத்தில் 20,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோதிகள் கைது.

129
0

ஏப்ரல் 4 முதல் 10, 2024 வரை சவூதி முழுவதும் குடியுரிமை, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 20,667 நபர்களை உள்துறை அமைச்சகம் கைது செய்துள்ளது.இதில் 14,805 குடியிருப்பு மீறல்களும், 3,860 எல்லை பாதுகாப்பு மீறல்களும், 2,002 தொழிலாளர் சட்ட மீறல்களும் அடங்கும்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 959 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர், அவர்களில் 44% பேர் ஏமன், 53% எத்தியோப்பியன் மற்றும் 3% பிற நாட்டினர். சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்குப் போக்குவரத்து, தங்குமிடம், பணியமர்த்துதல் ஆகியவற்றிற்கு உதவிய 9 நபர்களை அமைச்சகம் கைது செய்துள்ளது. 58,708 ஆண்கள் மற்றும் 4,379 பெண்களை உள்ளடக்கிய 63,087 பேர் கைது செய்யப்பட்டனர்.

பயண ஆவணங்களைப் பெறுவதற்கு 54,732 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர் மேலும் 6,271 பேர் நாடு கடத்தப்பட்டனர். குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 911 என்ற எண்ணையும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள 999 மற்றும் 996 என்ற எண்களை அழைப்பதன் மூலம் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!