Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட உலகளாவிய மாநாடு.

இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட உலகளாவிய மாநாடு.

163
0

“இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள் மற்றும் பிரிவுகளுக்கு இடையேயான பாலங்கள் இணைப்பு” என்ற தலைப்பில் உலகளாவிய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையில் தொடங்கியது.

பல்வேறு இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள் மற்றும் பிரிவுகளுக்கு இடையே புரிதல் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தக் குறிப்பிடத் தக்க நிகழ்வை முஸ்லிம் உலக லீக் (MWL) ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி, மூத்த அறிஞர்கள் கவுன்சில் மற்றும் ஸ்காலர் ரிசர்ச் மற்றும் இஃப்டாவின் பொதுத் தலைவர் மற்றும் MWL சுப்ரீம் கவுன்சிலின் தலைவரான ஷேக் அப்துல்லாஜிஸ் பின் அப்துல்லா அல்-ஷேக் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

ஷேக் அல்-ஷேக் மன்னர் சல்மானின் ஆதரவிற்காகவும், முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கும் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக அவருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

MWL பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான ஷேக் டாக்டர். முகமது பின் அப்துல்கரீம் அல்-இசா, இந்த மாநாடு இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையே பாலம் கட்டும் நோக்கம் கொண்டுள்ளது என்று அறிவித்தார்.

இஸ்லாமிய சமூகம் முழுவதும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முஃப்திகள் மற்றும் மூத்த அறிஞர்கள் உட்பட முக்கிய இஸ்லாமிய பிரமுகர்களின் கலந்துரையாடல்களை இந்த மாநாடு அமைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!