Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் 28,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ள 500,000 ஆசிரியர்கள்.

28,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ள 500,000 ஆசிரியர்கள்.

89
0

51 நாள் கோடை விடுமுறைக்குப் பிறகு சவூதி அரேபியா முழுவதும் 28,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அரை மில்லியனுக்கும் அதிகமான ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணியைத் தொடங்கினர்.

ஆகஸ்ட் 20ம் தேதி மாணவர்கள் பள்ளிகளுக்குச் திரும்புவார்கள். நடப்பு கல்வியாண்டு மூன்று செமஸ்டர்களைக் கொண்டது. சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சகம், புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு கல்விப் பள்ளிகளிலும் ஆயத்தப் பணிகள் நிறைவடையும் என்று உறுதி செய்துள்ளது.

முதல் செமஸ்டர் ஞாயிற்றுக்கிழமை 4 ஸஃபர் 1445 AH, ஆகஸ்ட் 20 அன்று தொடங்கி நவம்பர் 16, ஜமாதுல்-அவ்வல் 2 வரை தொடர்கிறது. இரண்டாவது செமஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, 12 ஜமாதுல் அவ்வல், நவம்பர் 26 அன்று தொடங்கி, பிப்ரவரி 22 வியாழன் அன்று முடிவடையும். மூன்றாவது செமஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஷபான் 22, மார்ச் 3, 2024 அன்று தொடங்கி ஜூன் 10, 2024, துல்ஹஜ்ஜா 4 திங்கட்கிழமை முடிவடையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!