குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் , எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 11,077 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 27 முதல் மே 3 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,845 பேர் குடியுரிமை முறைகளை மீறியதற்காகவும், எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக 4,025 பேரும்; 1,207 பேர் தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காகவும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நாட்டின் எல்லையைக் கடக்க முயன்ற 838 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 27% யேமனியர்கள், 58% எத்தியோப்பியர்கள் மற்றும் 15% பிற நாட்டினர் ஆவர்.
மொத்தம் 23,893 தற்போது விதிமுறைகளை மீறியவர்கள், அவர்களில் 19,940 ஆண்கள் மற்றும் 3,953 பெண்கள் ஆவர். 16,796 நபர்களைப் பயண ஆவணங்களைப் பெறுவதற்காகவும், பயண முன்பதிவுகளை முடிக்க 1,929 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.5,037 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்குத் தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரியால அபராதமாக விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் அவர்களது போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்கான வழிமுறைகள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.