Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் விவசாய சட்ட மீறல்களைக் கண்டறிய உதவுபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு.

விவசாய சட்ட மீறல்களைக் கண்டறிய உதவுபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு.

166
0

வேளாண்மைச் சட்ட விதிகளை மீறுவதைக் கண்டறிய, அமைச்சகத்தை ஆதரிப்பவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குவது தொடர்பான வரைவு விதிகளைச் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விதிகளின்படி தகவல் அளிப்பவர்களுக்கு 50000 ரியாலுக்கு மிகாமலும் 1000 ரியாலுக்கு குறையாமலும் நிதி வெகுமதி வழங்கப்படும்.

இந்த நோக்கத்திற்காகத் தயாரிக்கப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் மற்றும் தளங்கள் மூலம் மீறல்களைப் புகாரளிக்கலாம். வழங்கிய தகவல்களில் அவரது பெயர், தொடர்பு எண், ஐடி எண், இடம் மற்றும் மீறலின் முகவரி, வகை மற்றும் ஆவணங்கள் இருக்க வேண்டும்.

வரைவு விதிகளின்படி, அமைச்சரின் முடிவால் ஐந்து பேர் கொண்ட வெகுமதிக் குழு அமைக்கப்படும். வழக்குகளைக் குழு ஆய்வு செய்து, ஊக்க வெகுமதியின் தகுதியை மதிப்பிட்டு, தகவல் அளிப்பவர் மேற்கொண்ட முயற்சி மற்றும் புகாரளிக்கப்பட்ட மீறலுக்கான அபராதத் தொகை ஆகியவற்றைக் குழு கணக்கில் கொண்டு, ஊக்கத்தொகையை வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து வழங்கும்.

அமைச்சகம் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் இரகசியத்தன்மையை உறுதி செய்யும் மற்றும் தகவல் அளிப்பவரின் அடையாளம் தொடர்பான எந்தத் தகவலையும் வெளியிடாது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தவறானதாக இருந்தால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகத்திற்கு உரிமை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!