Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பாலஸ்தீனிய மற்றும் சூடான் மக்களுக்கு நிவாரண கப்பல்களை அனுப்பியுள்ள கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும்...

பாலஸ்தீனிய மற்றும் சூடான் மக்களுக்கு நிவாரண கப்பல்களை அனுப்பியுள்ள கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்.

105
0

கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) பாலஸ்தீனிய மற்றும் சூடான் மக்களுக்கு உதவ ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்தில் இருந்து இரண்டு நிவாரண கப்பல்களை அனுப்பியுள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கான எட்டாவது கப்பலில் உணவு கூடைகள், தங்குமிட பொருட்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் கனரக உபகரணங்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் உள்ள எல்-அரிஷ் துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.

எட்டு கப்பல்கள் மற்றும் 50 விமானங்கள் காசா பகுதிக்கு 6,500 டன்களுக்கு மேல் உதவிகளையும், சூடானுக்கான 31வது கப்பல் சுவாக்கின் துறைமுகத்திற்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கியுள்ளது.இதுவரை இந்த முயற்சி 31 கப்பல்கள் மற்றும் 13 விமானங்கள், சூடானுக்கு 14 டன் உதவிகளை வழங்கியுள்ளது.

KSrelief மேற்பார்வையாளர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா அல் ரபீஹ், பாலஸ்தீனிய மற்றும் சூடான் மக்களுக்கு நெருக்கடிகளின் போது மனிதாபிமான முயற்சிகளுக்குச் சவுதி அரேபியாவின் ஆதரவைப் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!