ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA), சவூதி துறைமுகத்தில் 100 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தும் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இந்தத் துறைமுகம் வழியாகச் சவுதி அரேபியாவுக்கு வரும் டிரக் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக ZATCA தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான சுங்கக் கட்டுப்பாட்டைக் கடுமையாக்குவது தொடரும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. இது அனைத்து கடத்தல் முயற்சிகளையும் எதிர்த்துப் போராடும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ZATCA இன் முயற்சிகள், பொது போதைப்பொருள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்துடன் (GDNC) ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன், கடத்தல் பொருட்களைக் கடத்தும் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
மேலும் சமூகம் மற்றும் தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு, பாதுகாப்பு அறிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட எண்ணின் (1910) மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ (1910@zatca.gov.sa ) அல்லது 00966114208417 என்ற சர்வதேச எண்ணில் தொடர்புகொள்வதன் மூலமோ ஒவ்வொரு குடி மக்களையும், குடியிருப்பாளர்களையும் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.
இந்த சேனல்கள் மூலம், கடத்தல் குற்றங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுங்க அமைப்பின் விதிகளை மீறுவது தொடர்பான அறிக்கைகளை முழு ரகசியமாகப் பெறுவதை ZATCA உறுதிப்படுத்துகிறது. மேலும் அறிக்கையின் தகவல் நிரூபிக்கப்பட்டால், தகவல் அளிப்பவருக்கு நிதி வெகுமதி அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.