2024 ஜூன் 27 முதல் ஜூலை 3, 2024 வரை சவுதி அரேபியாவின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொண்ட சோதனையில் குடியிருப்பு, வேலை மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 16,565 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 9,969 பேர் குடியுரிமை முறையை மீறியவர்கள், 4,676 நபர்கள் எல்லை பாதுகாப்பு முறையை மீறியவர்கள், 1,920 பேர் தொழிலாளர் முறையை மீறியவர்கள்.
சவுதி அரேபியாவிற்குள் எல்லையைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,244 ஐ எட்டியுள்ளது. அவர்களில், 37% யேமன், 60% எத்தியோப்பியன் மற்றும் 3% பிற நாட்டைச் சேர்ந்தவர்கள்.
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மற்றும் பணியமர்த்துவது போன்ற குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 12,219 நபர்கள் தூதரக பணிகளுக்கும்; 2,931 நபர்கள் தங்கள் பயண முன்பதிவுகளை முடிக்கவும் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 9,663 நபர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
எல்லைப் பாதுகாப்பை மீறுபவர்கள் நாட்டிற்குள் நுழைவதை எளிதாக்குபவர்கள், தங்குமிடம் அல்லது அவர்களுக்கு உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன்,
ஒரு மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
மக்கா, ரியாத் மற்றும் அல்-ஷர்கியாவில் (911) மற்றும் சவூதி அரேபியாவின் மற்ற பகுதிகளில் (999) அல்லது (996) என்ற எண் மூலம் மீறல்கள் குறித்து புகாரளிக்குமாறு அமைச்சகம் மக்களை வலியுறுத்தியது.