Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஒரு வாரத்தில் சுமார் 19,000 சட்டவிரோதிகள் கைது.

ஒரு வாரத்தில் சுமார் 19,000 சட்டவிரோதிகள் கைது.

191
0

ஜனவரி 18 முதல் 24 வரை, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் சுமார் 19,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11,427 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும், 4,697 பேர் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர் சட்டங்களை மீறிய 3,197 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1070 ஐ எட்டியுள்ளது, இதில் 31% ஏமனியர்கள், 67% எத்தியோப்பியர்கள் மற்றும் 2% பிற நாட்டினர். நாட்டிற்கு வெளியே எல்லையைக் கடக்க முயன்ற சுமார் 193 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை அடைக்கலப்படுத்தியதற்காக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 55,756 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 50,489 ஆண்கள் மற்றும் 5,267 பெண்கள் ஆவர். பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 49,553 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க 1,108 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 10,537 நபர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 911 என்ற எண்ணையும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள 999 மற்றும் 996 என்ற எண்களையும் அழைப்பதன் மூலம் விதிமீறல் வழக்குகளையும் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!