மக்காவை மையமாகக் கொண்ட பள்ளிகளில் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நடைபெற இருக்கிறது.மேலும் இந்த ஆண்டு ஹஜ் காலம் தொடங்கிய காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கல்வி அமைச்கம் தெரிவித்துள்ளது.
அந்த அடிப்படையில் மக்கா, பஹ்ரா, அல்-ஜமோம் மற்றும் அல்-கமில் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டின் இறுதித் தேதி ஜூன் 15 என்று அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதே சமயம், நாட்டில் உள்ள பிற பிராந்தியங்களில் இறுதி தேர்வுகள் ஜூன் 22 அன்று முடிவடையும்.