வருடாந்த புனித ஹஜ் பயணத்தைத் தொடர்ந்து நபிகள் நாயகத்தின் மசூதிக்குச் சென்று பிரார்த்தனை செய்வதற்காகப் புனித நகரமான மதீனாவுக்கு வந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 259,514 ஐ எட்டியது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஹரமைன் அதிவேக ரயில் மற்றும் விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மதீனாவுக்கு வந்தடைந்தனர்.
மதீனாவிற்கு வந்து புறப்படும் பயணிகள்பற்றிய ஹஜ் மற்றும் வருகைக் குழுவின் புள்ளிவிவரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை மதீனாவிற்கு வந்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 24,552 ஆகும், அவர்களில் 20,777 பேர் 124 விமானங்களில் இளவரசர் முகமது பின் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வரை தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 126,997 ஆகவும், 132,499 பயணிகள் மதீனாவில் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மதீனாவில் 68,341 பயணிகளுக்குச் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.