ரியாத்தில் ஒரு கிடங்கில் மின் இயந்திரங்களின் சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,394,000 ஆம்பெடமைன் வகை போதை மாத்திரைகளைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சவூதி இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்தப் போதைப்பொருள் கடத்தல் நடந்ததாகவும், இந்தக் கடத்தல் நடவடிக்கையை முறியடிப்பதில் அமைச்சகம் வெற்றியடைந்துள்ளதாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்தின் (ஜிடிஎன்சி) செய்தித் தொடர்பாளர் மேஜர் மர்வான் அல்-ஹாசிமி கூறியுள்ளார்.
சந்தேகத்தின் பெயரில் ஜோர்டானியர் மற்றும் சிரியர் ஆகிய இரு குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னர் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் குற்றவாளிகள் பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல், ஊக்குவித்தல் குறித்து தகவல் தெரிவிக்க மக்கா, ரியாத் மற்றும் அல்-ஷர்கியா பகுதிகளில் உள்ள மக்கள் 911 என்ற எண்ணிற்கும், சவூதியின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் 999 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பாதுகாப்பு முகமைகள் வலியுறுத்தியுள்ளது.
GDNC இன் எண்: 995 மற்றும் மின்னஞ்சல் 995@gdnc.gov.sa. ஆகிய தளங்களில் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் அனைத்து அறிக்கைகளும் இரகசியமாகக் கையாளப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.