மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமும் முக்கியமானது. இந்த விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 2500 பேர் வரை வந்து செல்கின்றனர்.
உள்நாட்டில் சென்னை, மும்பை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி போன்ற இடங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், மலேசியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இதனால் விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்க பணியின் நிலை என்ன?, எப்போது பணி நிறைவு பெறும்?, 24 மணி நேர சேவை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்வு ஆகியன எப்போது செய்யப்படும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை ஒருவர் ஆடிஐயில் கேட்டிருந்தார். அதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பதிலளித்துள்ளது.