Home செய்திகள் உலக செய்திகள் புதிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் WHO

புதிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் WHO

167
0

கோவிட்-19 போன்ற மற்றொரு கொடிய தொற்றுநோயைத் திட்டமிடுவதற்கும் அதனை சமாளிக்கும் திறனை வலுப்படுத்த புதிய முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு (WHO) தொடங்கியுள்ளது.

காய்ச்சல்,கொரோனா வைரஸ், சுவாச நோய்க்கிருமிகள் போன்றவற்றிற்கு வழிகாட்டுதல் வழங்குகிறது. வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கான முன்முயற்சி, தொற்றுநோய் போன்ற சுகாதார அவசரநிலைகளின் போது நிறுவப்பட்ட கருவிகள் மற்றும் அணுகுமுறைகளை உள்ளடக்கியதுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நிறுவனம் தனது நான்காம் தயாரிப்பு மற்றும் பதிலளிப்பு திட்டத்தை (SPRP) ஐ.நா சுகாதார நிறுவனத்தால் வெளியிடும் என்று கூறியுள்ளார்.

COVID-19 இறப்புகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 95% குறைந்து வருகிறது.சில நாடுகளில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது, கடந்த 4 வாரங்களில், 14,000 பேர் கோவிட் நோயால் உயிரிழந்துள்ளனர்.

புதிய XBB.1.16 மாறுபாட்டின் தோற்றம் காட்டுவது போல், வைரஸ் இன்னும் மாறிக்கொண்டே இருக்கிறது. “இந்த ஆண்டு , COVID-19 க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனுடன் மற்ற தொற்று நோய்களுடன் சேர்ந்து அதை நிர்வகிக்க அனைத்து நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என டெட்ரோஸ் கூறியுள்ளார்.

PRET நோய்க்கிருமிகளின் குழுக்கள் மற்றும் அதை பாதிக்கும் அமைப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம், தொற்றுநோய் திட்டமிடலுக்கு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை எடுக்கலாம். “இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா,RSV மற்றும் இன்னும் அறியப்படாத நோய்க்கிருமிகள் உள்ளிட்ட சுவாச நோய்க்கிருமிகளில் PRET கவனம் செலுத்தும்”, என கூறியுள்ளார்.

COVID-19 , தொற்றுநோய் என்பது ஒரு சுகாதார நெருக்கடி மட்டுமல்ல. இது பொருளாதாரம், கல்வி, வர்த்தகம், பயணம், உணவு விநியோக அமைப்புகள் மற்றும் பலவற்றை பாதிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!