பிரவாசி பாரதிய சஹாயக் கேந்திராவில் (பிபிஎஸ்கே) மூன்று பணியாளர்களுக்கான தற்காலிக பதவிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அடிப்படை மாத ஊதியம் 4000 ரியால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கான தகுதி வரம்பு:
1) விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2)கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3) ஆங்கிலத்தில் சரளமாக எழுதுதல் மற்றும் அரபு மொழி அறிவு மிகவும் வரவேற்கத்தக்கது.
4) வயது வரம்பு 21-40க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான www.eoiriyadh.gov.in மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி: 31.08.2023. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஷிப்ட் அடிப்படையில் (இரவு ஷிப்ட் மற்றும் வார இறுதி உட்பட) வேலை செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பங்களை https://forms.gle/3zcviq2SNSXmH5ZS7 என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.