Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பள்ளிக் கொடுமைபடுத்துதல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது சவூதி சுகாதார அமைச்சகம்.

பள்ளிக் கொடுமைபடுத்துதல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது சவூதி சுகாதார அமைச்சகம்.

305
0

மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கொடுமைப்படுத்துதல் சம்பவங்களைக் குறைப்பதற்கும், சுகாதார அமைச்சகம் பள்ளிகளில் கொடுமைப்படுத்துதல் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ஒரு மாணவர் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதைக் குறிக்கும் மிக முக்கியமான அறிகுறிகளை இந்தப் பிரச்சாரம் அடையாளம் கண்டு அவற்றில் உடல் காயங்கள், மோசமான கல்வி செயல்திறன், பதட்டம் மற்றும் மனநிலை மாற்றங்கள் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கம் ஆகியவை அடங்கும் என அறிவித்துள்ளது.

கொடுமைப்படுத்தப்படும் மாணவர்களை அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் அல்லது அவர்கள் நம்பும் எவருடனும் தொடர்பு கொள்ளுமாறு மேலும் கொடுமைப்படுத்துபவர்களுக்கு பதிலளிப்பதையோ அல்லது அவர் முன்னிலையில் தனியாக இருப்பதையோ தவிர்க்கவும் அமைச்சகம் கூறியுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஈடுபடுத்தவும், கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராடும் முயற்சிகளில் பங்களிக்க அவர்களை ஊக்குவிக்கவும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிபர்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!