Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பள்ளிகளுக்கு அருகில் சத்தம் எழுப்பினால் அபராதம்.

பள்ளிகளுக்கு அருகில் சத்தம் எழுப்பினால் அபராதம்.

326
0

வாகனத்தில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தி சத்தம் எழுப்புதல் அல்லது வாகனம் ஓட்டும்போது பொது ஒழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்வது போக்குவரத்து விதிமீறல் என்று போக்குவரத்து இயக்குனரகம் (மரூர்) தெரிவித்துள்ளது.

வகுப்புகளின்போது கல்விக் கட்டிடங்களுக்கு அருகில் சத்தம் எழுப்புவதும் மாணவர்களின் கவனத்தையும் கற்கும் திறனையும் இழக்க நேரிடும் என்று மரூர் கூறியுள்ளது. இதைச் செய்பவர்களுக்கு 300 ரியால் முதல் 500 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் எனப் போக்குவரத்து இயக்குனரகம் உறுதி செய்துள்ளது.

குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள் வழியாக எவரும் செல்லக் கூடாது என மரூர் எச்சரித்துள்ளது. பள்ளி பேருந்துகளைக் கடந்து சென்றால் 3,000 ரியால் முதல் 6,000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!