Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பசுமை எரிசக்தி கூட்டாண்மையை! உறுதிப்படுத்தியுள்ள சவூதி மற்றும் இந்தியா.

பசுமை எரிசக்தி கூட்டாண்மையை! உறுதிப்படுத்தியுள்ள சவூதி மற்றும் இந்தியா.

225
0

சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் மற்றும் இந்தியாவின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ராஜ் குமார் சிங் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.

ரியாத்தில் சவூதி அரேபியா நடத்திய மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா காலநிலை வாரத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார இணைப்பு, சுத்தமான ஹைட்ரஜன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும், மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் மின் இணைப்புத் துறையில் விரிவான ஒத்துழைப்பு, தேவையான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் மின்சாரப் பரிமாற்றத்தை எளிதாக்குவது ஆகியவை அடங்கும். பசுமை/சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில் இரு நாடுகளும் தனித்துவமான திறன்களை வளர்த்து வருகின்றன.

சவூதி அரேபியாவும் இந்தியாவும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திட்டங்களில் பங்கேற்பதற்கான தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறைகளுக்கு முக்கியமான பொருட்களை நிறுவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!