Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் நைஜீரியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சை ரியாத்தில் தொடங்கியது.

நைஜீரியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சை ரியாத்தில் தொடங்கியது.

184
0

நைஜீரியாவை சார்ந்த ஒமர் ராயனோ தம்பதிகளின் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சையை, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) மேற்பார்வையாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் ரபீஹ் தலைமையிலான அறுவை சிகிச்சைக் குழு தொடங்கியது.

35 ஆலோசகர்கள், நிபுணர்கள், நர்சிங் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பங்கேற்புடன் இந்த அறுவை சிகிச்சை ரியாத்தில் உள்ள குழந்தைகளுக்கான மன்னர் அப்துல்லா ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சை எட்டு நிலைகளில் சுமார் 14 மணி நேரம் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என டாக்டர் அல் ரபீஹ் விளக்கியுள்ளார்.

நைஜீரியாவில் உள்ள கடுனாவில் ஜனவரி 12, 2022 அன்று இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வயிறு, இடுப்பு, கல்லீரல், குடல், சிறுநீர் மற்றும் இனப்பெருக்க அமைப்பு மற்றும் இடுப்பு எலும்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று டாக்டர் அல் ரபீஹ் கூறியுள்ளார். கடந்த 33 ஆண்டுகளில் 23 நாடுகளில் இருந்து சியாமி இரட்டையர்களைப் பிரிப்பதற்கான சவூதி திட்டம் இதுவரை 130 வழக்குகளை மேற்பார்வையிட்டு அதில் 55 வழக்குகளைப் பிரித்துள்ளது, இது 56வது சிகிச்சையாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!