நாஜிஸ் தளத்தின் மூலம் வழங்கப்பட்ட எலக்ட்ரானிக் பவர் ஆஃப் அட்டர்னி சேவையால் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பயனடைந்வர்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கு மேல் எட்டியுள்ளதாகச் சவூதி அரேபியாவின் நீதி அமைச்சகம் (MOJ) தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மாற்றம் பயனர்களுக்குச் சேவைகளை எளிதாக்குவதற்கும், ஆவணப்படுத்தல் துறையில் நேரத்தையும் முயற்சியையும் குறைப்பதற்கும் பங்களித்துள்ளது என MoJ தெளிவுபடுத்தியுள்ளது.
மெய்நிகர் நோட்டரி பொது சேவை ஒன்றைத் தொடங்க நீதித்துறை அமைச்சர் Dr. Walid Al-Samaani முன்பு உத்தரவிட்டிருந்தார்.இது நோட்டரி சேவைகளை மின்னணு முறையில் வழங்குவதையும், நோட்டரி சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை உயர்த்துதல், பயனாளியின் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.