அல்-ஜூஃப் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் இரகசியமாக நிலத்தடி கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,882,198 ஆம்பெடமைன் மாத்திரைகளைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சவூதி இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்தப் போதைப்பொருள் கடத்தல் நடந்ததாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்தின் (ஜிடிஎன்சி) செய்தித் தொடர்பாளர் மேஜர் மர்வான் அல்-ஹஸ்மி, கூறியுள்ளார்.
3 சவூதி குடிமக்கள், ஒரு ஏமன் குடியிருப்பாளர், மற்றும் சந்தேகத்தின் பெயரில் மேலும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேஜர் தெரிவித்துள்ளார். முன்னர் அவர்களுக்கு எதிராகப் பூர்வாங்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்களைப் பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், ஊக்குவித்தல் குறித்து தகவல் தெரிவிக்க மக்கா, ரியாத் மற்றும் அல்-ஷர்கியா பகுதிகளில் உள்ள குடிமக்கள் 911 என்ற எண்ணிற்கும், சவூதியின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் 999 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பாதுகாப்பு முகமைகள் வலியுறுத்தியுள்ளது.GDNC இன் எண்: 995 மற்றும் மின்னஞ்சல்: 995@gdnc.gov.sa ஆகிய தளங்களில் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் அனைத்து அறிக்கைகளும் இரகசியமாகக் கையாளப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.