Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஜி 20 மாநாடு- இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை...

ஜி 20 மாநாடு- இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை அறிவித்த சவூதி இளவரசர்.

312
0

இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் பொருளாதார வழித்தட திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதாகச் சவுதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அறிவித்தார்.

இந்தத் திட்டம் பொருளாதார இணைப்பை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புது டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் தொடக்க நிகழ்வில் பட்டத்து இளவரசர் பேசியதாவது: “இந்த நட்பு நாட்டில் நாம் இன்று பொருளாதார வழித்தடத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் திட்டம் ஆகும் .

“கடந்த சில மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் உச்சக்கட்டம்தான் இந்தத் திட்டம் என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தத் திட்டம் ரயில்வே, துறைமுக இணைப்புகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகளின் தாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும், இதனால் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே வர்த்தகத்தை மேம்பட உதவுகிறது.

“அதிக செயல்திறன், நம்பகமான எல்லை தாண்டிய தரவு பரிமாற்றத்திற்கு கூடுதலாக, உலகளாவிய எரிசக்தி விநியோக பாதுகாப்பை மேம்படுத்த மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான குழாய்களை இது நீட்டிக்கும்.”

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தூய்மையான எரிசக்தி மேம்பாட்டு முயற்சிகளை ஆதரிக்கிறது மற்றும் அனைத்து தரப்பினருக்கும் புதிய, உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று பட்டத்து இளவரசர் எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!