Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சூடான் ஊழியர்களை வெளியேற்றியதற்காக உலக வங்கி குழுமத் தலைவர்,சவூதி மன்னருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

சூடான் ஊழியர்களை வெளியேற்றியதற்காக உலக வங்கி குழுமத் தலைவர்,சவூதி மன்னருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

234
0

உலக வங்கிக் குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ், சூடானில் இருந்து சவூதிக்கு உலக வங்கி ஊழியர்களை வெளியேற்றியதற்காக இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மானுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில், உலக வங்கி குழுமத் தலைவர்: “சூடானில் உள்ள எங்கள் ஊழியர்களுக்குச் சவூதி அரசு வழங்கிய ஆதரவிற்கு எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கடிதத்தில் கூறியுள்ளார்.

உலக வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களைக் கவனித்து கொண்டதற்காக, கார்ட்டூமில் உள்ள தூதரகம் ஊழியர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!