நிழலுலக தாதா அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கடும் பதட்டம் நிலவுகிறது.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது மூன்று நபர்கள் அவர்களை சுட்டுக் கொன்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அத்திக், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஆகியோர் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை என யோகி ஆதித்யநாத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.