Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி மற்றும் பஹ்ரைன் பகுதி பயணிகளின் டோல்கேட் பயன்பாட்டிற்காக KFCA இ-பேமெண்ட் சேவைகளை வழங்குகிறது.

சவூதி மற்றும் பஹ்ரைன் பகுதி பயணிகளின் டோல்கேட் பயன்பாட்டிற்காக KFCA இ-பேமெண்ட் சேவைகளை வழங்குகிறது.

245
0

கிங் ஃபஹ்ட் காஸ்வே ஆணையம் சவூதி மற்றும் பஹ்ரைன் பகுதி மக்கள் இருபுறமும் உள்ள டோல் கேட்களைக் கடக்க உதவும் வகையில் (KFCA) 4 இ-பேமென்ட் சேவைகளை வழங்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தானியங்கி மின்னணு வாயில்களைப் பயன்படுத்தி, “Jesr” அல்லது “Causeway” பயன்பாட்டின் மூலம் KFCA 4 மின்-கட்டணச் சேவைகளை வழங்கியுள்ளது.

முதலாவதாக காரின் தட்டு எண் மூலம் வாகனத்தை தானாக அடையாளம் காணும் தொழில்நுட்பமாக பார்க் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தியுள்ளது,
இது மனித தலையீடு தேவையில்லாமல் வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.இந்த சேவையை Jesr செயலி மூலம் செயல்படுத்தலாம், அடுத்ததாக கட்டணம் டிஜிட்டல் வாலட் வாயிலாகவும்,மேலும் QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் KFCA ஆனது பயணிகளின் வாகனங்களின் முன் கண்ணாடியில் வைக்கப்படும் RFID சிப் மூலம் ரேடியோ அலைவரிசை அடையாள (RFID), “தஷீல்” சேவையையும் வழங்கியுள்ளது.
இதில் நுழைவாயிலுக்கு வந்தவுடன் பயணிகளின் வாகனங்கள் RFID சிப் மூலம் தானாகவே அடையாளம் காணப்பட்டு, பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், KFCA yusur சேவையின் மூலம் உள்நுழைய வேண்டிய அவசியமின்றி பயன்பாட்டிற்கான பிரதான பகுதியை பார்வையாளராகப் பயன்படுத்தும் போது மின்-வாலட்டை நிரப்புவதன் மூலம் ஒரு முறை டிரான்சிட் ஆகும்.

சவூதியில் உள்ள நடைமுறைகள் அப்பகுதி பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் அளவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குள் ஒன்றாக,இலவச wifi சேவையை வழங்குவதாக KFCA முன்பு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!