சவூதி அரேபியாவில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான பொதுக் கல்விப் பள்ளிகளுக்கும், நிர்வாக மற்றும் கல்விப் பணியாளர்களுக்கும் ஈத் அல்-பித்ர் விடுமுறை கடந்த ஏப்ரல் 13 முதல் அதாவது ரமலான் 22 வியாழன் அன்று தொடங்குகியது.
மேலும் நடப்பு கல்வியாண்டின் இறுதி செமஸ்டரை முடிக்க ஏப்ரல் 26, ஷவ்வால் 6 ஆம் தேதி புதன்கிழமை 12 நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவார்கள் என்று MHRSD தெரிவித்துள்ளது.
தனியார் துறை மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு ஈத் அல்-பித்ர் விடுமுறை 4 நாட்கள் என்றும்,ரம்ஜான் 29 ,ஏப்ரல் 20 வியாழன் அன்று வேலை நாளின் முடிவில் விடுமுறை தொடங்கும் என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) தெரிவித்துள்ளது.