கடந்த செப்டம்பர் 26 செவ்வாயன்று NEOM இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரியான முகமது பின் சல்மான் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை, எகிப்து மற்றும் ஜோர்டானின் ஆதரவுடன் அரபு லீக் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சவுதி அரேபியா மேற்கொண்ட அமைதியை கட்டியெழுப்பும் முயற்சிகளை எடுத்துரைத்தது.
எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்காகச் சவுதி அரேபியா அரசுக்கும் பின்லாந்து அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு ஒன்றை ஃபின்லாந்து தரப்புடன் விவாதிக்க எரிசக்தி அமைச்சருக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
சவுதி-அல்ஜீரிய உச்ச ஒருங்கிணைப்பு கவுன்சிலை நிறுவுவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் பல முக்கிய முடிவுகளை எடுத்த இக்கூட்டத்தில் சவூதி அரேபியாவின் உருக் பானி மாரிட் காப்பகத்தை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கு அமைச்சரவை அன்பான வரவேற்பையும் ஆதரவையும் வழங்கியது, மேலும் இக்கூட்டம் சவூதி அரேபியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதால அமைந்தது.