சவூதி அரேபியாவின் விஷன் 2030 இன் இலக்குகளில் ஒன்றான ஏழு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 30 மில்லியனுக்கும் அதிகமான உம்ராஹ் பயணிகளைப் பெறுவதற்கு சவூதி இலக்கு வைத்துள்ளது.
இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ், ஒரு சிறப்புமிக்க சடங்காகும், விசுவாசிகள் எப்போதும் தங்களால் முடிந்த போதெல்லாம் ஹஜ் செய்ய ஆர்வமாக உள்ளனர்.
ஹஜ் செய்ய, உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் தங்கள் நாடு, இனம், அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மக்காவுக்குப் பயணம் செய்கிறார்கள். ஹஜ் பயணம், மக்கா பயணம், காபாவைக் காணுதல் மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வது உட்பட அனைத்து விசுவாசிகளுக்கும் ஒரு குறிக்கோள் மற்றும் விருப்பமாகும். ஆனால் மக்காவிற்கு பயணம் செய்வது எப்பொழுதும் சுலபமாக இல்லை. மக்கா வரலாற்று மையத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஃபவாஸ் பின் அலி அல்-தஹாஸின் அவர்களின் கூற்றுப்படி, கடந்த காலங்களில் “போக்குவரத்து மிகவும் பழமையானதாகவும் மெதுவாகவும் கடினமாகவும் இருந்தது. பயணிகள் உலகம் முழுவதிலுமிருந்து கப்பல்கள்மூலம் மக்காவிற்குச் செல்லும்போது அனைத்து வகையான சிரமங்களையும் எதிர்கொண்டனர். ஒட்டகத்தின் மீதும் சிலர் கால்நடையாகச் சென்றாலும் பயணம் எளிதானது அல்ல.அது பாதுகாப்பற்றது மற்றும் மிகவும் சிரமத்திற்குறியக்தாக இருந்தது. அல்-ஹிஜாஸ் செல்லும் சாலைகள் வளர்ச்சியடையாமல் இருந்தது, தண்ணீர் நிலையங்கள் இல்லாததால் தாகத்தால் மரணம் ஏற்படலாம், மேலும் ரவுடிகள் பயணிகளின் கேரவன்களை தாக்கலாம் மேலும் அவர்கள் எடுத்துச் சென்ற உணவு மற்றும் பிற பொருட்களைத் திருடுகிறார்கள்.”
அதுபோல் புனிதப் பயணப் பாதைகள் நீளமானவை, வளைவுகள் மற்றும் பாதுகாப்பற்றவை, மேலும் மக்காவுக்கான பயணம் ஆபத்தாகக் காணப்பட்டது; பயணிகள் தங்கள் உறவினர்களிடம் விடைபெறும் காட்சிகள் பயணத்தின் வெற்றியில் நம்பிக்கையின்மையை அடிக்கடி சித்தரிக்கும், இது கடினமான மற்றும் ஆபத்தான பாதைகளில் பல மாதங்கள் நீடிக்கும். ஆனால், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கு விமானப் போக்குவரத்து சாத்தியமாக்கும் வரை போக்குவரத்து வழிமுறைகளின் நிலையான வளர்ச்சி காரணமாக, நிலைமைகள் மிகவும் மேம்பட்டது மற்றும் புனித யாத்திரை பயணம் எளிதாகி, சவுதி அரசு ஸ்தாபனத்துடன் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது.
சில மணிநேரங்களில் மக்காவை அடைய உலகின். கடற்பயண பயணிகளுக்கு வசதிகளுடன் கூடிய நவீன கப்பல்கள், கடல்கள் வழியாக ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்திற்கு பயணம் செய்வது இனிமையான பயணமாக அமைகிறது.
இந்த எளிய பயணங்களைப் பயன்படுத்தி மக்கள் வெகுதிரளாக வருவதும் குறிப்பிடத்தக்கது.