சவூதி அரேபியாவின் இளவரசர் சௌத் பின் அப்துல் அஜிஸ் பின் ஃபஹத் அல்-ஃபர்ஹான் அல்-சௌத் ஒரு உத்வேகம் அளிப்பவர் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியில் மாற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் வாதிடுபவராகக் கருதபபடுகிறார்.
மேலும் இவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சிறந்த சவூதியை கட்டியெழுப்புவதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், நாட்டின் விஷன் 2030 க்கு பங்களிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
மக்கள் தொகையில் 65% க்கும் அதிகமானோர் 30 வயதிற்குட்பட்டவர்கள், இளைய சவூதி தலைமுறையின் லட்சியத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். யாகூன் இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிட்டியின் செயல் தலைவராக, சவுதிமயமாக்கலை ஊக்குவிப்பதிலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் குறிப்பிடத் தக்க பங்கை வகிக்கிறார்.
இளவரசர் சௌத் ஊழியர்கள் சிறந்த சிகிச்சையைப் பெறுவதையும் ஆரோக்கியமான சூழலில் பணியாற்றுவதையும் உறுதி செய்கிறார். சவுதி ஆட்டிசம் சொசைட்டியின் தலைவராகப் பணியாற்றுகிறார். சவூதி ஆட்டிசம் சொசைட்டி மற்றும் உலகின் முதல் உதவித்தொகை நிதி போன்ற முன்முயற்சிகள் மூலம், சவூதி அரேபியாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை இளவரசர் சவூத் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இளவரசர் சௌதின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகள் மற்றும் சவூதிமயமாக்கலை ஆதரிப்பது அவரை எதிர்காலத்தை நோக்கிய சவூதியின் பயணத்தில் முக்கிய நபராக ஆக்குகிறது.