சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை வரை இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது ஆபத்தாக முடியும் எனச் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுமாறு குடிமைத் தற்காப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தாயிஃப், ஆதம், அல்-அர்தியத் மற்றும் அல்-கமல் உள்ளிட்ட மக்கா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.அசிர், ஜிசான் மற்றும் அல்-பஹா பகுதிகள் மிதமானது முதல் கனமழையால் பாதிக்கப்படும்.இது கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் காற்றுக்கும் வழிவகுக்கும்.
அல்-ஜமூம், பஹ்ரா, அல்-குன்ஃபுதா, அல்-லைத் மற்றும் மதீனா, பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்-ஜூஃப், தபூக் மற்றும் அல்-ஷர்கியா பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்றும் சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.





