ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினைரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 14,244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8,398பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும், 3,703 எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர் சட்டங்களை மீறிய 2,143 நபர்களும், 895 பேர் சவூதிக்குள் எல்லையைக் கடக்க முயன்றபோதும்,38 பேர் சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற எல்லையைக் கடக்க முயன்றபோதும் கைது செய்யப்பட்டனர். இதில் 54% ஏமனியர்கள், 45% எத்தியோப்பியர்கள் மற்றும் 1% பிற நாட்டினர்.
குற்றவாளிகளை அடைக்கலப்படுத்தியதற்காக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மொத்தம் 38,167 பேர் விதிமுறைகள் மீறியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 31,358 ஆண்கள் மற்றும் 6,809 பெண்கள் ஆவர்.
பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 32,286 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க 1732 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர், மேலும் 9,983 நபர் நாடு கடத்தப்பட்டனர்.
குற்றவாளிக்குத் தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.