நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு வாரத்திற்குள், ஜூலை 20 முதல் 26 வரை குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சுமார் 13,308 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7,725பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும், 3,427 பேர்கள் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர் சட்டங்களை மீறிய 2,156 நபர்களும், 572 பேர் சவூதிக்குள் எல்லையைக் கடக்க முயன்றபோதும்,58 பேர் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற எல்லையைக் கடக்க முயன்றபோதும் கைது செய்யப்பட்டனர். இதில் 62% ஏமனியர்கள், 37% எத்தியோப்பியர்கள் மற்றும் 1% பிற நாட்டினர்.
குற்றவாளிகளை அடைக்கலப்படுத்தியதற்காக 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் 36,953 விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 30,660 ஆண்கள் மற்றும் 6,293 பெண்கள் ஆவர்.
பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 30,701 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க 2155 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,205 பேர் நாடு கடத்தப்பட்டனர்.குற்றவாளிகளுக்கு உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.