Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவுதி-இந்தியா அடிப்படை கூட்டுறவின் முக்கிய தூணாக விளங்கும் எரிசக்தி ஒப்பந்தங்கள்.

சவுதி-இந்தியா அடிப்படை கூட்டுறவின் முக்கிய தூணாக விளங்கும் எரிசக்தி ஒப்பந்தங்கள்.

230
0

சவூதி-இந்திய அடிப்படை கூட்டுறவின் முக்கிய தூணாக எரிசக்தி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பட்டத்து இளவரசரும், இந்திய பிரதமரும் எடுத்துரைத்தனர். திங்களன்று பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் இந்தியப் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின.

இரு நாடுகளுக்கு இடையேயான அடிப்படை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தனர். 2019 அக்டோபரில் இரு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அமைக்கப்பட்ட இந்தியா – சவூதி அடிப்படை கூட்டாண்மை கவுன்சிலின் (SPC) முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

இரு தலைவர்களும் கூட்டாண்மை கவுன்சிலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்தனர். அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் முதலீடுகளுக்கான குழு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை இது பலப்படுத்தியுள்ளது. கூட்டத்தின் முடிவில் இரு தலைவர்களும் கூட்டத் தொடரில் கையெழுத்திட்டனர்.

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வதற்கும், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அவசர நடவடிக்கையின் கீழ் முழு ஆதரவை வழங்கியதற்கும் சவூதி அரேபியாவுக்கு இந்தியா தனது பாராட்டுகளைத் தெரிவித்தது. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை எளிதாக்குவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்புக்கும் இந்தியா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!