சவூதி அரேபியா தனது தன்னிச்சையான எண்ணெய் உற்பத்தி குறைப்பை ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் வீதம் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் குறைப்பு ஏப்ரல் 2023 இல் சவூதியால் அறிவிக்கப்பட்ட தன்னார்வ குறைப்பை விடக் கூடுதலாக இருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் இது டிசம்பர் 2024 இறுதி வரை அமலில் இருக்கும்.
இந்தக் கூடுதல் தன்னார்வக் குறைப்பு, OPEC பிளஸ் உறுப்பு நாடுகளால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.