சரக்கு லாரியில் சுமார் 143,000 கேப்டகன் வகை போதை மாத்திரைகளை மறைத்து வைத்து ஹதீதா துறைமுகம் வழியாகக் கடத்த முயன்றதை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) முறியடித்துள்ளது. துறைமுகம் வழியாக வந்த வாகனத்தைச் சோதனை செய்தபோது, லாரியின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ZATCA தெரிவித்துள்ளது.
சுங்க விற்பனை நிலையங்கள் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் மீதான சுங்கக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து குற்றச் செயல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்து கடத்தல் முயற்சிகளை எதிர்கொள்வதாக ஆணையம் தெறிவித்துள்ளது.
கடத்தல் குற்றங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுங்க விதிகளை மீறுவது தொடர்பான அறிக்கைகளை (1910) அல்லது மின்னஞ்சல்: 1910@zatca.gov.sa என்ற இணைய வாயிலாக அல்லது (00966114208417) என்ற எண் மூலம் தொடர்புக் கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாமென ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் சமூகம் மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதுகாத்து கடத்தலை எதிர்த்துப் போராட பங்களிக்குமாறு பொது மக்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது மற்றும் சரியான தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





