Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் குழந்தையை சித்திரவதை செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து பொது வழக்குக்கு அனுப்பப்பட்ட தாய்.

குழந்தையை சித்திரவதை செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து பொது வழக்குக்கு அனுப்பப்பட்ட தாய்.

302
0

மகளைச் சித்திரவதை செய்ததாகத் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டு, பொது வழக்கு விசாரணைக்காகக் கிழக்கு மாகாண காவல்துறையின் அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அந்த பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாண காவல்துறையின் பேச்சாளர், குழந்தை தனது தாயால் தாக்கப்படும் காட்சிகள் பரப்பப்பட்டதைக் கண்ட போலீசார் சம்பவத்தைக் கண்காணித்தனர் எனக் கூறியுள்ளார். “இந்த வழக்கு மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் குடும்ப நலப் பிரிவின் ஒருங்கிணைப்பில் விசாரிக்கப்பட்டு, சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு வழக்கு அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை 1919 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பதன் மூலம் தெரிவிக்குமாறும், சிறப்புக் குழு மூலம் குழந்தைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும், குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கை எடுக்கவும் 17 குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!