உலக நீரை நிலையாகப் பாதுகாப்பதில் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்காகச் சவூதி அரேபியா உலகளாவிய நீர் அமைப்பை நிறுவுகிறது என்று பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அறிவித்தார்.
அமைப்பின் நிறுவனத்தைத் தொடங்குவதன் மூலம், உலகளாவிய நீர் வழங்கல் சவால்களை எதிர்கொள்வதற்கான அதன் உறுதிப்பாட்டை சவூதி வலியுறுத்தி, இந்த முயற்சியானது சுற்றுச்சூழலுக்கான சவூதி அரேபியாவின் அர்ப்பணிப்புடன் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா பல ஆண்டுகளாக, நீர் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க சாதனைகளைப் பதிவு செய்து, உலகளாவிய நீர் பிரச்சினைகள் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் முதன்மையான முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நான்கு கண்டங்களில் பல்வேறு நீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு $6 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் உலக மக்கள்தொகை 9.8 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2050 ஆம் ஆண்டளவில் உலகளாவிய தண்ணீர் தேவை இரட்டிப்பாகும் என்ற கணிப்புகளுடன் இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாகிறது.
சவூதி அரேபியா, அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுடன், நீர் பாதுகாப்பு தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், மனிதகுலத்திற்கான உலகளாவிய நீர் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்தை ஒன்றிணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த மற்றும் நீண்டகால தாக்கத்தை உருவாக்குவதையும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.