நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள், ஜூலை 6 முதல் 12 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சுமார் 11,915 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமை முறைகளை மீறியதற்காக 6,359 நபர்களும், 3,753 எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும் மற்றும் 1,803 தொழிலாளர் சட்டங்களை மீறியதற்கும் 675 பேர் நாட்டிற்குள் எல்லையைக் கடக்க முயன்ற போதும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 54% ஏமனியர்கள், 44% எத்தியோப்பியர்கள் மற்றும் 2% பிற நாட்டினர் ஆவர்.
குடியுரிமை மற்றும் பணி விதிமுறைகளை மீறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதிற்காக 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 29,620 ஆண்கள் மற்றும் 6,080 பெண்கள் அடங்குவர்
கைதானவர்களில் 26,161 நபர்கள் பயண ஆவணங்களைப் பெறுவதற்காகவும், முன்பதிவுகளை முடிக்க 3,407 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர். 4,508 நபர்கள் நாடு கடத்தப்பட்டனர். குற்றவாளியை நாட்டிற்குள் நுழைய, போக்குவரத்து அல்லது தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.