Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் எண்ணெய் உற்பத்தி குறைப்பை செப்டம்பர் வரை நீட்டித்தது சவூதி அரேபியா எரிசக்தி அமைச்சகம்.

எண்ணெய் உற்பத்தி குறைப்பை செப்டம்பர் வரை நீட்டித்தது சவூதி அரேபியா எரிசக்தி அமைச்சகம்.

265
0

ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி குறைப்பை (பிபிடி) ஜூலை மாதம் தொடங்கி, மேலும் இது செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப் போவதாகச் சவூதி அரேபியா எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரம் தெரிவித்துள்ளது.

இந்தக் குறைப்பை நீட்டிப்பதன் மூலமாகவோ அல்லது அதிகரிப்பதன் மூலமாகவோ செப்டம்பர் 2023 இல் சவூதியின் உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் ஒன்பது மில்லியன் பீப்பாய்களாக இருக்கும் என்று அமைச்சகம் சவூதி பிரஸ் ஏஜென்சி மேற்கொண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் கூடுதல் தன்னார்வ குறைப்பு எண்ணெய் சந்தைகளின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை ஆதரிக்கும் நோக்கத்துடன் OPEC + நாடுகளால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்று ஆணையம் உறுதிப்படுத்தியது.

மேலும் ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு நாளைக்கு 300,000 பீப்பாய்கள் தன்னார்வக் குறைப்பை செப்டம்பர் மாதம்வரை நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய துணைப் பிரதம மந்திரி அலெக்சாண்டர் நோவாக் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!