தெற்கு ஆசிர் பகுதியில் உள்ள குடிமைத் தற்காப்புப் படைகள், வெள்ளத்தின் போது சிலர் பள்ளத்தாக்குகளைக் கடக்கச் செல்வது கண்டுபிடித்து,மேலும் அவர்களின் இரண்டு வாகனங்களில் சிக்கிய ஏழு பேரை மீட்டு,வெள்ளப் பாதைகளைக் கடப்பது தொடர்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு SR10000 அபராதம் விதித்தனர்.
கனமழை பெய்யும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்றும்,வெள்ளத்தின் போது தாழ்வான பகுதிகள் வழியாக செல்லவோ, நீர் குளங்களை அணுகவோ வேண்டாம் என்றும், பள்ளத்தாக்குகளை கடக்க வேண்டாம் என்றும் குடிமைத் தற்காப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
மேலும் சிவில் டிஃபென்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் பள்ளத்தாக்குகள் மற்றும் பாறைகளைக் கடப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக SR10,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.