சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இன்ஜி. அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மொஹ்சென் அல்-ஃபட்லி, அரபு உலகம் அதன் சுற்றுச்சூழலின் தோராயமாக 90% அரை வறண்ட, வறண்ட துணை ஈரப்பதம் மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் அமைந்துள்ளது எனவும், மேலும் அவை எதிர்கொள்ளும் குறிப்பிடத் தக்க சுற்றுச்சூழல் சவால்களையும் வலியுறுத்தி அதனை எதிர்கொள்ள நிலையான தீர்வுகளைக் காண ரியாத்தில் நடைபெற்ற வறண்ட மண்டலங்கள் மற்றும் உலர் நிலங்கள்பற்றிய ஆய்வுகளுக்கான அரபு மையத்தின் (ACSAD) நிர்வாகக் குழுவின் 43வது அமர்வின்போது நாடுகளிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
சவூதி பசுமை முன்முயற்சி, மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சி , நிலச் சீரழிவைக் குறைத்தல் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் உலகளாவிய முன்முயற்சி போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் முயற்சிகளைச் சவூதி தொடங்கியுள்ளது.
மேலும், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள், நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை ஆகியவற்றில் சவூதி உறுதியாக உள்ளது எனவும், கூட்டத்தின் வெற்றிக்கும், மேம்பட்ட ஒத்துழைப்பிற்கும், அரபு மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் அமைச்சர் அல்-ஃபட்லி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ACSAD இன் டைரக்டர் ஜெனரல், Nasr ElDin AlObeid, ஒத்துழைப்பை முன்னேற்றுவதிலும், கூட்டு அரபு நடவடிக்கையை ஊக்குவிப்பதிலும் சவூதியின் பங்கைப் பாராட்டி, அவர் விரும்பிய இலக்குகளை அடைவதில் அரபு நாடுகளின் லீக்கின் தலைமைச் செயலகத்தின் ஆக்கபூர்வமான பங்கை, குறிப்பாக அதன் பொருளாதாரத் துறையை ஒப்புக்கொண்டார்.
தீவிர வானிலை, காலநிலை மாற்றம், நீர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய நெருக்கடிகள் ஆகியவை அரபு பகுதியில் உற்பத்தி மற்றும் உணவு நிலைத்தன்மையை மோசமாகப் பாதித்து, உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்கு குறிப்பிடத் தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன என்று AlObeid விளக்கி, ACSAD ஆனது உலகளாவிய நிலையான வளர்ச்சி முயற்சிகளின் இலக்குகளை அடைவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று வலியுறுத்தினார்.